Home »
» வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ் மரியாதை
விடுதலை போராட்டத்துக்கு முதல் வித்திட்ட வீரன் அழகுமுத்துக்கோனின் 276–வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை, கோகுல மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிறப்பு விருந்தினராக சமூக ஜனநாயக கூட்டணி தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு மாலை அணிவித்தார். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, தேசிய பார்வர்டு பிளாக் நிறுவனர் பி.டி.அரசகுமார், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், தெலுங்கு மக்கள் கட்சி தலைவர் ராஜ்குமார், வேளாளர், பிள்ளைமார், செங்குந்த முதலியார் கூட்ட மைப்பு தலைவர் கே.ராஜன், கொங்குநாடு மேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்க தலைவர் முனுசாமி ஆகியோரும் மாலை அணி வித்தனர்.
பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரர் அழகு முத்துகோனுக்கு அவர் போரிட்டு உயிர்நீத்த இடமான தூத்துக்குடி மாவட்டம் காட்டாங்குளமேட்டில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்.அவரது வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும். இது அந்த சமுதாய மக்களின் கோரிக்கை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஏற்று அரசு செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Posts:
“புலியையே குத்திக் கொன்னதால இந்தப் பேரு!” - வீரத்துக்குப் புகழ்பெற்ற புலிக்குளம் நாட்டு மாடுகள்
நாட்டு இன மாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் புலிக்குளம் மாடுகளைப் பாதுகாக்க ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டசபையில் அறிவித்திருப்பது புலிக்குளம் மக்களுக்கு மகிழ… Read More
'யாகூ' நம் தொழில்முனைவோர் பயிற்சி முகாம்
வேலை தேடுவோர் அல்ல 'யாம்', வேலை கொடுப்போரே 'யாம்'
'யாகூ' வரலாற்று நிகழ்வின் துவக்க நாயகன் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், IAS, (Small & Medium Scale Industries, Secretary to the TN Government) அவர்கள் குத்துவிளக்கு ஏற… Read More
கல்லூரியை ஒப்படைக்க வேண்டும் - அரசுக்கு யாதவர்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் : 'யாதவர்கள் கல்வி நிதியில் நடத்தப்படும், யாதவர் கல்லுாரியை, அரசு திரும்ப ஒப்படைக்க, வேண்டும்' என, அந்த ஜாதியினர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.யாதவர் பேரவையின், 12வது மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் வ… Read More
YADAVA MOVEMENT IN TAMILNADU
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
… Read More
கீதாரிகள் : ஆடு ஊடாடாம காடு விளையாதும்பாக !
தஞ்சையை ஒட்டிய கிராமத்தில் ஆட்டுக் கிடை போட்டிருந்த பாஸ்கரன்
ஆட்ட தவிர எனக்கு வேற தொழிலும் தெரியாது. காலங்காலமா செஞ்ச தொழில விட்டுபோட்டு இந்த வயசுக்கு மேல எங்குட்டு போயி சம்பாரிக்க முடியும்.
“வரப்பே தலையன வயக்காடே ப… Read More
0 comments:
Post a Comment