Thursday, July 10, 2014
Home »
» திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார்
சோழவள நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கிய உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் காத்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார். தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.
தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.
ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அவனையே நினைந்து எம்பெருமானுடன் கலந்தார் என்பது புராண வரலாறு. தம் பாசுரங்களில் மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாகப் பாடியுள்ளார்.
Related Posts:
இதை தவறாமல் படிக்கவும் ! இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச் செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டனர… Read More
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்… Read More
மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங் மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது: நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அ… Read More
யாதவர்களே சூளுரைப்போம் ! அணைத்து யாதவ மக்களையும் விழிப்படைய செய்வோம் ! !வெற்றிபெருவோம்!!! 1.உங்கள் தொகுதியில் யாதவ கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப்போட வேண்டும் !2.யாதவர் ஒருவர் எந்த கட்சியையும் சாராது தனித்து போட்டியிட்டால் அவருக்கே உங்கள் ஓட்டு என்பதை உறுதி செய்ய வேண்டும் !3. தி மு… Read More
திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார் ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எ… Read More
0 comments:
Post a Comment